

நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல இது சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண்போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப் பெண்போராளி,isappiriya இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியாவாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment